Monday, 9 March 2015

II nd meeting of PKN 1968 Alumni on 8-3-15



08-03-2015  
அன்று காலை ஓய்வுபெற்ற அலுவலர் சங்கக் கட்டடத்தில் நமது இரண்டாவது கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விபரம்:
1.       S.தனசேகரன்,
2.       D.ராஜமாணிக்கம்,
3.       Y.சுப்புராஜ்,
4.       D.சிக்கந்தர் ஹையாத்,
5.       V.பெருமாள்,
6.       V.நாகராஜன்,
7.       A.திருப்பதி வெங்கடாச்சலபதி,
8.       S.பாலகிருஷ்ணன்,
9.       A.பக்ருதின் ஆதம்,
10.   S.விஜயவர்மன்,
11.   L.பாக்யசாலி,
12.   A.லத்தீப்,
13.   C.பாண்டி,
14.   M.ராஜாராம்,
15.   S.சுப்ரமணியன்,
16.   N.P.ராஜன்,
17.   செருவன்,
18.   K.பாண்டி ஆகியோர்.
கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
1.       அனைத்து நண்பர்களுக்கும் இமெயில் துவங்க வேண்டிக்கொள்ளப்பட்டது. அதன் விபரம் சுப்ரமணியனிடம் தெரிவிக்க வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது.
2.       நமக்குத் தலைமை ஆசிரியராய் இருந்து வழிகாட்டிய நம் நினைவில் வாழும் திரு அருணாச்சலம் அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்துதல்.
3.       ஆறாம் வகுப்பு முதல் பதினோறாம் வகுப்புவரை நமக்கு ஆசிரியர்களாக இருந்தவர்களுக்கும், அப்போதைய காலகட்டத்தில் பள்ளியில் பணிபுரிந்து இன்று நம்மிடையே வாழ்பவர்களுக்கும் உரிய மரியாதை செலுத்துதல்.
4.       நம் பள்ளியின் அனுமதி பெற்று நம் குடும்பத்தாருடன் பள்ளி வளாகத்தை சுற்றி பார்த்து நம்முடைய நினைவுகளைப் புதுப்பித்தல், புகைப்படம் எடுத்துக் கொள்ளல், மற்றும் பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர் ஆகியோருக்கு அப்போது மரியாதை செலுத்துதல்.
5.       அனைவரையும் தங்களின் பள்ளி நினைவுகளை பகிர்ந்துகொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டது. இமெயில் மூலமாக அதை அனைவருடனும் பகிர்ந்துகொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டது இமெயில் இல்லாதவர்கள் தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுதிக்கொண்டு வந்தால் அதை சுப்ரமணியன் இமெயில் வழியாக அனைவருக்கும்அனுப்ப முயற்சி செய்வார். இந்த நினைவலைகளின் தொகுப்பை புத்தக வடிவில் கொண்டுவர முயற்சி செய்தல்.
6.       நண்பர்களின் குழ்ந்தைகளில் யாருக்கேனும் திருமணம் ஆகாமல் இருந்தால் அதற்கான முயற்சியில் ஈடுபடுதல்.
7.       அனைத்து நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் முடிந்தவரை அனைவரும் கலந்து கொள்ளல்.

இத்துடன் கூட்டம் நிறைவுற்றது.

No comments:

Post a Comment